பதிவு செய்த நாள்
03 ஏப்2013
00:14
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கடலில், "ஒலைக்கா' நண்டு சீசன் துவங்கியுள்ளது. அதிகளவில் கிடைக்கும் நண்டுகளை, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அனுப்பும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நண்டு சீசன்: கடலில் அலை குறைவாக உள்ள பகுதியில், நண்டுகள் அதிகமாக இருக்கும். நவம்பர் முதல் மே வரை நண்டு சீசன் என்பதால், தூத்துக்குடி, கீழக்கரை, வேதாளை, மண்டபம், பனைக்குளம், ஆற்றங்கரை, அழகன்குளம், இரணியன்வலசை, பழனிவலசை, புதுவலசை பகுதி மீனவர்கள் பனைக்குளம் கடற்கரையில் முகாமிட்டு, குடும்பத்தோடு நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பனைக்குளம் மீனவர் ஒருவர் கூறியதாவது:ஒரு படகில், நான்கு மீனவர்கள் சென்று வலை விரிக்கிறோம். 20 கிலோ வரை "ஒலைக்கா' நண்டு கிடைக்கிறது.
ஜப்பான்: பனைக்குளம் பகுதியில், தற்போது சீசன் துவங்கி உள்ளது. தினமும், 400 கிலோ வரை நண்டு கிடைக்கிறது. கடற்கரை பகுதியிலேயே நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள், கிலோ, 150 ரூபாய்க்கு வாங்கி அங்கேயே அவிக்கின்றனர். பின்னர் அவற்றை சுத்தம் செய்து, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|