பதிவு செய்த நாள்
03 ஏப்2013
09:21
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.06 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 28.69 புள்ளிகள் குறைந்து 19012.26 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.90 புள்ளிகள் குறைந்து 5739.20 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று நன்கு இருந்தது. மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, "சென்செக்ஸ்' 0.93 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. எனினும், இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வியாபாரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. இருப்பினும், மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் மட்டும் குறைந்த விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|