பதிவு செய்த நாள்
03 ஏப்2013
11:20
புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்களிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார சூழ்நிலைகள் மாறியுள்ளன. தொழிற்சாலைகள் இன்றி நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைய முடியாது. உலக சவாலை சமாளிக்க அரசுக்கு இந்திய தொழிலதிபர்கள் ஒத்துழைக்க வேண்டும். வளர்ச்சி என்பது அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தினை எட்டும் என நம்புகிறேன். இந்தாண்டு பட்ஜெட்டில் கடும் நிதி பற்றாக்குறை நிலவி உள்ளது.இது தற்காலிக வீழ்ச்சி தான். இதனை சமாளிக்க உரிய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்றுமதி துறையிலும் மந்தமானநிலை என்பதனை மறுப்பதற்கில்லை. முறையான ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் உள்கட்டமைப்பு திட்டங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இணக்கமான முதலீட்டு சூழ்நிலையை உருவாக்கப்படும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|