பதிவு செய்த நாள்
04 ஏப்2013
00:51
கோல்கட்டா:இந்திய கிராமப்புறங்களில், அலைபேசி சேவையை பெறும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு 2013ம் ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும், நாடு தழுவிய அளவில், கிராமப்புறங்களில், கூடுதலாக, 57 லட்சம் பேர் அலைபேசி சேவையை பெற்றுள்ளனர்.
கணக்கீட்டு மாதங்களில், வோடபோன் நிறுவனம், கிராமப்புறங்களில், கூடுதலாக, 30.20 லட்சம் வாடிக்கை யாளர் களை இணைத்து கொண்டுள்ளது. இதே போன்று, பார்தி ஏர்டெல், கூடுதலாக, 29.50 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஐடியா செல்லுலார் கூடுதலாக, 26.40 லட்சம் வாடிக்கையாளர்களையும் இணைத்து கொண்டுள்ளன.மார்ச் 1ம் தேதி வரையிலுமாக, இந்திய கிராமப்புறங்களில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத் திலான அலைபேசி சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை, 25.80 கோடியாக உள்ளது.
பிப்ரவரி வரையிலான ஆறு மாத காலத்தில், கிராமப்புறங்களில், ஜி.எஸ்.எம்., அலைபேசி சேவையில், கூடுதலாக, 67.80 லட்சம் பேர் இணைந்துள்ளதாக, இந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|