பதிவு செய்த நாள்
06 ஏப்2013
00:17
புதுடில்லி:வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இணையதளம் வாயிலான விளம்பர துறையின் சந்தை மதிப்பு, 2,938 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
வளர்ச்சி:நடப்பாண்டு மார்ச் வரையிலான காலத்தில், இத்துறை, 29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,260 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்துஇருந்தது என, இந்திய கைபேசி மற்றும் இணையதள கூட்டமைப்பு மற்றும் ஐ.எம்.ஆர்.பி. இண்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவை கூட்டாக தெரிவித்துள்ளன.
வரும் நான்கு ஆண்டுகளில், இந்திய இணையதள விளம்பர சந்தை, ஆண்டுக்கு சராசரியாக, 40 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கைபேசி, சமூக ஊடகங்கள், வீடியோ வாயிலாக விளம்பரங்கள் செய்வது அதிகரித்ததையடுத்து, பதாகைகள் வாயிலான விளம்பரங்களின் பங்களிப்பு சரிவடைந்துள்ளது.குறிப்பாக, உள்நாட்டில் "ஸ்மார்ட் போன்' எனப்படும் விரைவான இணையதள சேவை கொண்ட கைபேசிகளின் எண்ணிக்கை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இதையடுத்து, சென்ற 2012-13ம் நிதியாண்டில், கைபேசி வாயிலான விளம்பரங்களுக்கு செலவிடும் தொகை, இரண்டு மடங்கு உயர்ந்து, 230 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 115 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனங்கள், கைபேசி மூலம் விளம்பரங்கள் மேற்கொள்வதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதையடுத்து, இதன் வாயிலான வருவாய் சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.
கைபேசி விளம்பரம்:சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த விளம்பர சந்தை வருவாயில், டேப்லெட் மற்றும் கைபேசி வாயிலான விளம்பரங்களின் பங்களிப்பு, 7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த 2012-13ம் நிதியாண்டில், 10 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.இது தவிர, சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் வீடியோ வாயிலான விளம்பரங்களின் பங்களிப்பு முறையே, 13 சதவீதம் (300 கோடி ரூபாய்), 3 சதவீதம் ( 68 கோடி ரூபாய்) மற்றும் 7 சதவீதம் (150 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|