இணையதள விளம்பரம் ரூ.2,938 கோடியாக உயரும்இணையதள விளம்பரம் ரூ.2,938 கோடியாக உயரும் ... தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.408 உயர்ந்தது தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.408 உயர்ந்தது ...
சர்க்கரை விலை குறைவு வரும் நாட்களிலும் நீடிக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
11:09

சர்க்கரை விலை மீதான கட்டுப்பாட்டை, மத்திய அரசு விலக்கிக் கொண்டதால், விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும், வரும் நாட்களில், சர்க்கரை விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பது கேள்வி குறியாகவுள்ளது.

கோரிக்கை: சர்க்கரை விலை மீதான கட்டுப்பாடு, மத்திய அரசு வசம் இருந்தது. இந்த விலை கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என, சர்க்கரை ஆலைகள் கோரி வந்தன. பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட, இந்த கோரிக்கை குறித்து ஆராய, பிரதமரின் பொருளாதார ஆலோசகர், ரங்கராஜன் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.இந்தக் குழு, சில மாதங்களுக்கு முன் அளித்த அறிக்கை மீது, நேற்று முன் தினம், மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. இதன்படி, சர்க்கரை விலை மீதான கட்டுப்பாட்டை, மத்திய அரசு விலக்கிக் கொள்வது என்றும், இனி, சர்க்கரை விலையை, சர்க்கரை ஆலைகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாற்றங்கள்: சர்க்கரை விலை மீதான கட்டுப்பாட்டை, மத்திய அரசு விலக்கிக் கொண்டதால், சர்க்கரை உற்பத்தி தொழில் துறையில், புதிய மாற்றங்கள் நிகழலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, டில்லியில் நேற்று, சர்க்கரை ஆலைகளின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: சர்க்கரை விலை மீதான கட்டுப்பாட்டை, மத்திய அரசு விலக்கிக் கொண்டதால், இதுவரை மத்திய அரசு வசமிருந்த அதிகாரம், தற்போது, ஆலைகளின் கைகளுக்கு மாறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, சர்க்கரை ஆலைகள் துறையில், இதுவரை நிலவி வந்த சுணக்கத்தை போக்கும்.மத்திய அமைச்சரவையின் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே, எண்ணற்ற சர்க்கரை ஆலைகள், விரைந்து செயல்படத் துவங்கியுள்ளன. இதுவரை, தங்கள் கைவசம் இருந்த சர்க்கரையை, துரிதமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பு சர்க்கரை அனைத்தும், வெளியே வந்துள்ளதால், சந்தையில் சர்க்கரையின் விலை, கணிசமாக குறைந்துள்ளது.

வளர்ச்சி: இதுவரை, கிலோ, 30 முதல், 31 ரூபாய் வரை விற்கப்பட்ட, 1 கிலோ சர்க்கரை, நேற்று, வட மாநிலங்களில், கிலோ, 29.40 ரூபாய்க்கும், சென்னை உட்பட, தென்மாநில நகரங்களில், 28.75 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.இனி, சர்க்கரை விலை, அதிக அளவு ஏற வாய்ப்பு இல்லை. வரும், சில மாதங்களில், சிறிதளவு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ஒரு கட்டத்திலிருந்து குறிப்பிட்ட விலையே நீடிக்கும்.சர்க்கரை விலை மீதான கட்டுப்பாடு, மத்திய அரசு வசமிருந்தபோது, சர்க்கரை ஆலைகள், தங்கள் உற்பத்தியில், 10 சதவீதத்தை, அரசுக்கு மானிய விலையில் அளித்து வந்தன. அதாவது, கிலோ, 13.50க்கு, அரசுக்கு தந்தன. இனி, கிலோவுக்கு, 32 ரூபாய் கொடுத்தே, சர்க்கரை ஆலைகளிடம் இருந்து, அரசு சர்க்கரை வாங்க வேண்டும். இதனால், சர்க்கரை ஆலைகள் வளர்ச்சி அடையும்.கடந்த பயிர் ஆண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருந்தது. இந்த ஆண்டு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலவும், வறட்சி காரணமாக, விளைச்சல் குறைந்துள்ளதால், உற்பத்தி, 10 லட்சம் டன் வரை குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு சர்க்கரை ஆலைகளின் உயர் அதிகாரிகளின் கூறினர்.

கட்டுப்பாடுகள் மேலும் தளருமா? கரும்பு உற்பத்தியில், உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக, மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. சர்க்கரை ஆலைகள் தரப்பில், எண்ணற்ற கோரிக்கைகள், அரசுக்கு விடுக்கப்பட்டிருந்தன.அவற்றில், விலை கட்டுப்பாடு மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள், குறிப்பிட்ட தூர இடைவெளியில் இயங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் உற்பத்தியாகும் கரும்புகள் எல்லாம், அந்தப் பகுதி ஆலைகளுக்கே வழங்கப்பட வேண்டும் என, மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் எல்லாம், இன்னும் தொடர்கின்றன. இந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டால், சர்க்கரை ஆலைகள் மேலும் வளர்ச்சி அடையும் என்பது, ஆலை நிர்வாகங்களின் கருத்து.

-நமது டில்லி நிருபர்-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)