பதிவு செய்த நாள்
06 ஏப்2013
23:58
புதுடில்லி:சென்ற, 2012-13ம் நிதியாண்டிற்கான வரி வசூல் இலக்கு எட்டப்பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: சென்ற நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு அளவான, 10,38,037 கோடி ரூபாய் அளவிற்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரி வருவாய் வளர்ச்சி, 16.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உள்ளது.நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 சதவீதம் என்ற அளவில் சற்று அதிகரிக்கும். வரி வருவாய் இலக்கும் எட்டப்படும்.
சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து, இதற்கான மத்திய அரசின் மானிய செலவில், ஆண்டுக்கு, 2,500-2,600 கோடி ரூபாய் அதிகரிக்கும்.எனினும், சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கம், விவசாயிகள் மற்றும் ஆலைகளுக்கு பயன் அளிக்கும்."உங்கள் கையில் உங்கள் பணம்' எனும் நேரடியாக மானியம் பெறும் திட்டம், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|