பதிவு செய்த நாள்
10 ஏப்2013
00:20
நாமக்கல்:வங்கக்கடலில், மீன் பிடிப்பதற்கான தடை அமலுக்கு வருவதால், முட்டைக்கான தேவை அதிகரித்து, விலை உயரும் வாய்ப்புள்ளது' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல தலைவர், செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கோடை வெயில் தாக்கம் காரணமாக, பர்வாலா, விஜயவாடா, ஹோஸ்பெட், நாமக்கல் உள்ளிட்ட மண்டலங்களில், முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. அதன் காரணமாக, கோல்கட்டா உள்ளிட்ட முட்டை விற்பனை மண்டலங்களில், விலை உயரத் துவங்கியது. அதேபோல், ஐதராபாத், ஹோஸ்பெட் போன்ற கொள்முதல் மண்டலங்களிலும், முட்டை விலை, உயரத் துவங்கியுள்ளது.
காய்கறி விலையேற்றம், கேரளாவில் ஈஸ்டர் பண்டிகை நிறைவு ஆகிய காரணங்களால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே, நாடு முழுவதும் முட்டை விலை ஏற்றம் காணத் துவங்கியது. மற்ற மண்டலங்களின் விலை நிலவரத்தை அனுசரித்து, நாமக்கல்லில், நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை, 15 காசு உயர்த்தி, 300 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல், 15 ம் தேதி முதல், கிழக்கு கடற்கரையில், மீன்பிடித் தடை அமலுக்கு வருவதால், முட்டைக்கான தேவை மேலும் அதிகரித்து, விலை உயர வாய்ப்புள்ளது.தீவன மூலப்பொருட்கள் பற்றாக்குறையை சமாளிக்க, பண்ணைகளில், 65 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளை, கழிவுக் கோழிகளாக பிடித்து விற்பனை செய்து, பண்ணைத் தொழிலை லாபகரமாக நடத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|