நாட்டின் முந்திரி ஏற்றுமதி 15 சதவீதம் சரிவடையும்நாட்டின் முந்திரி ஏற்றுமதி 15 சதவீதம் சரிவடையும் ... உள்நாட்டில் பாக்கு விலை 26 சதவீதம் வீழ்ச்சி கண்டது உள்நாட்டில் பாக்கு விலை 26 சதவீதம் வீழ்ச்சி கண்டது ...
கடலில் மீன் பிடிக்க தடையால்முட்டை விலை மேலும் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
00:20

நாமக்கல்:வங்கக்கடலில், மீன் பிடிப்பதற்கான தடை அமலுக்கு வருவதால், முட்டைக்கான தேவை அதிகரித்து, விலை உயரும் வாய்ப்புள்ளது' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல தலைவர், செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கோடை வெயில் தாக்கம் காரணமாக, பர்வாலா, விஜயவாடா, ஹோஸ்பெட், நாமக்கல் உள்ளிட்ட மண்டலங்களில், முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. அதன் காரணமாக, கோல்கட்டா உள்ளிட்ட முட்டை விற்பனை மண்டலங்களில், விலை உயரத் துவங்கியது. அதேபோல், ஐதராபாத், ஹோஸ்பெட் போன்ற கொள்முதல் மண்டலங்களிலும், முட்டை விலை, உயரத் துவங்கியுள்ளது.

காய்கறி விலையேற்றம், கேரளாவில் ஈஸ்டர் பண்டிகை நிறைவு ஆகிய காரணங்களால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே, நாடு முழுவதும் முட்டை விலை ஏற்றம் காணத் துவங்கியது. மற்ற மண்டலங்களின் விலை நிலவரத்தை அனுசரித்து, நாமக்கல்லில், நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை, 15 காசு உயர்த்தி, 300 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல், 15 ம் தேதி முதல், கிழக்கு கடற்கரையில், மீன்பிடித் தடை அமலுக்கு வருவதால், முட்டைக்கான தேவை மேலும் அதிகரித்து, விலை உயர வாய்ப்புள்ளது.தீவன மூலப்பொருட்கள் பற்றாக்குறையை சமாளிக்க, பண்ணைகளில், 65 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளை, கழிவுக் கோழிகளாக பிடித்து விற்பனை செய்து, பண்ணைத் தொழிலை லாபகரமாக நடத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)