பதிவு செய்த நாள்
10 ஏப்2013
00:22
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், "சென்செக்ஸ்', 1.15 சதவீத சரிவுடனும், "நிப்டி', 5,500 புள்ளிகளுக்கு கீழும் சென்று முடிவடைந்தன.இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 211.30 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,226.48 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,565.56 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,206.61 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 47.85 புள்ளிகள் சரிவடைந்து, 5,495.10 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,603.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,487 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|