பதிவு செய்த நாள்
10 ஏப்2013
09:21
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.09 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.66 புள்ளிகள் அதிகரித்து 18355.14 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 41.15 புள்ளிகள் அதிகரித்து 5536.25 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், 'சென்செக்ஸ்', 1.15 சதவீத சரிவுடனும், 'நிப்டி', 5,500 புள்ளிகளுக்கு கீழும் சென்று முடிவடைந்தன.இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை இருந்தது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|