உள்நாட்டில் பாக்கு விலை 26 சதவீதம் வீழ்ச்சி கண்டதுஉள்நாட்டில் பாக்கு விலை 26 சதவீதம் வீழ்ச்சி கண்டது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160  உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...
கொளுத்தும் வெயிலால் பீர் விற்பனை கடும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
10:10

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், டாஸ்மாக் கடைகளில், பீர் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஏழு நாட்களுக்கு தேவையான, பீர் இருப்பு, கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில், 15க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. பீர் விலை, ரகத்திற்கு ஏற்றாவாறு, 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை, அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கடந்த, 2011-12ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 2012-13ம் நிதியாண்டில், பீர் விற்பனை, 60 சதவீதம் அதிகரித்தது. நடப்பாண்டில், இதன் விற்பனையை மேலும் அதிகரிக்க, டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே, கடைகளுக்கு, விஸ்கி, பிராந்தியை காட்டிலும், கூடுதலாக, பீர் சப்ளையை செய்து வருகிறது. தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், "குடி'மகன்கள் அதிக அளவில், பீர் குடிக்கத் துவங்கியுள்ளளனர். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து, டாஸ்மாக் கடைகளிலும், பீர் விற்பனை அதிகரித்துள்ளது. பீர் தட்டுப்பாடு ஏற்பட்டு "குடி'மகன்கள் அல்லல்படுவதை தவிர்க்க, கடைகளில், ஏழு நாள் விற்பனைக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு கடையில், நாளென்றுக்கு சராசரியாக, 20-30 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, தற்போது, 50-75 பெட்டிகளாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மாதந்தோறும், பீர் விற்பனை சராசரியாக, 23-25 லட்சம் பெட்டிகளாக இருக்கும். சில "குடி'மகன்கள், மதுபானத்துக்கு பதிலாக, பீர் வாங்கி குடிப்பதால், விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு ஏப்ரல், மே மாதங்களில், விற்பனை, 40 லட்சம் பெட்டிகளை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)