பதிவு செய்த நாள்
10 ஏப்2013
15:22
சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிள் என்பது, 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு கவுரவ சின்னம். இப்போது, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. வீட்டுக்கு வீடு, ஒன்றுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர் இருப்பது, வாடிக்கைதான். அதே நேரத்தில், பழைய பைக்குகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைப்பதில், பெரும் சிக்கல் உள்ளது.கடந்த காலங்களில், புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு, அந்த பைக் விற்பனையில் ஈடுபடும். ஆனால், காலம் செல்ல செல்ல, இந்த நடைமுறை மாறி விட்டது.
மக்களின் எதிர்பார்ப்பு, ஆசை உள்ளிட்ட பல காரணங்களினால், புதிய புதிய மாடல் பைக்குகள் விற்பனைக்கு வருகின்றன. ஒரு பைக் அறிமுகப்படுத்தப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்கு தான் தாக்கு பிடிக்கிறது. குறுகிய காலத்தில், மக்களின் எதிர்பார்ப்பு மாறி, அடுத்த கட்டத்துக்கு சென்று விடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனையில் தொய்வு நிலையில் உள்ள பைக் உற்பத்தியை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், குறைத்து விடுகின்றன அல்லது அடியோடு, நிறுத்தி விடுகின்றன. இதற்கு அடுத்த கட்டமாக, பைக் விற்பனையில் ஈடுபட்டுள்ள டீலர்கள், உற்பத்தி நிறுத்தப்பட்ட பைக்குகளின் உதிரி பாகங்களை, குறிப்பிட்ட காலத்துக்கு தான் ஸ்டாக் வைக்கின்றனர். சர்வீஸ் சென்டர்களும், உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால், பழைய பைக்குகளை, சர்வீஸுக்கு எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், பஜாஜ் காலிபர் 115, பஜாஜ் கிரிஸ்டல், ஹோண்டா என்டர்னோ, ஹீரோ ஸ்ட்ரீட், டி.வி.எஸ்., சென்ட்ரா போன்ற பைக்குகளுக்கு, உதிரி பாகங்கள் கிடைப்பதில், சிக்கல் காணப்படுகிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்ட போது, பழைய பைக்குகளை வைத்து இருப்பவர்கள், இணைய தளம் மூலம் எங்களை தொடர்பு கொண்டு, உதிரி பாகங்கள் தேவை என்று குறிப்பிட்டால், குறிப்பிட்ட உதிரி பாகத்தை சப்ளை செய்ய தயாராகவே இருக்கிறோம் என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|