பதிவு செய்த நாள்
11 ஏப்2013
00:43
புதுடில்லி:தனியார் நிறுவனங்கள், புதிய வங்கிகளை துவக்க அனுமதிக்கும் முடிவை, ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும் என, நிதி துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு
வலியுறுத்தியுள்ளது.விதிமுறை:தனியார் நிறுவனங்கள் வங்கிகளை துவக்குவதற்கான, இறுதி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் ஜூலை 1ம் தேதிக்குள், புதிய வங்கிக்கான விண்ணப்பங்களை நிறுவனங்கள் வழங்கலாம்.ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், வங்கித் துறையில் ஊழலுக்கு வழி வகுக்கும் என, யஷ்வந்த் சின்கா தலைமையிலான, பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்துள்ளது.
வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் முடிவை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும் என, நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, இக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் இறுதி விதிமுறைகள் கடுமையாக உள்ளதால், வங்கித் துறையில் ஈடுபட, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது என, சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதி இல்லை.சர்வதேச வங்கித் துறையின் நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி மிகுந்த எச்சரிக்கையுடன் புதிய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கும் பிரச்னையை அணுக வேண்டும்.கறுப்பு பணம் :நாட்டில், மேலும் தனியார் வங்கிகளை அனுமதிப்பது, கறுப்பு பணப் புழக்கத்திற்கு வழி வகுக்காது என்பதை, ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு கருத்துக்களை குழு தலைவர் யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|