16,000 மெகா வாட் மின் உற்பத்திக்குநிலக்கரி அளிக்க இயலாது: அமைச்சகம் 16,000 மெகா வாட் மின் உற்பத்திக்குநிலக்கரி அளிக்க இயலாது: அமைச்சகம் ... இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு 456 கோடி டாலர் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு 456 கோடி டாலர் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தனியார் வங்கி துவங்க பார்லி., நிலை குழு எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
00:43

புதுடில்லி:தனியார் நிறுவனங்கள், புதிய வங்கிகளை துவக்க அனுமதிக்கும் முடிவை, ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும் என, நிதி துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு
வலியுறுத்தியுள்ளது.விதிமுறை:தனியார் நிறுவனங்கள் வங்கிகளை துவக்குவதற்கான, இறுதி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் ஜூலை 1ம் தேதிக்குள், புதிய வங்கிக்கான விண்ணப்பங்களை நிறுவனங்கள் வழங்கலாம்.ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், வங்கித் துறையில் ஊழலுக்கு வழி வகுக்கும் என, யஷ்வந்த் சின்கா தலைமையிலான, பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்துள்ளது.

வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் முடிவை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும் என, நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, இக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் இறுதி விதிமுறைகள் கடுமையாக உள்ளதால், வங்கித் துறையில் ஈடுபட, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது என, சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதி இல்லை.சர்வதேச வங்கித் துறையின் நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி மிகுந்த எச்சரிக்கையுடன் புதிய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கும் பிரச்னையை அணுக வேண்டும்.கறுப்பு பணம் :நாட்டில், மேலும் தனியார் வங்கிகளை அனுமதிப்பது, கறுப்பு பணப் புழக்கத்திற்கு வழி வகுக்காது என்பதை, ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு கருத்துக்களை குழு தலைவர் யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த உறுப்பினர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)