பதிவு செய்த நாள்
11 ஏப்2013
00:45
ஸ்ரீவில்லிபுத்தூர்:பதனீர் வரத்து குறைவால், கருப்பட்டி உற்பத்தி பாதிப்படைந்து உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை, மம்சாபுரம் பகுதியில், 50 ஆயிரத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் பதனீரை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியும், தனியாக கருப்பட்டியும் தயாரிக்கின்றனர். கடந்தாண்டு சரிவர மழை பெய்யாததால், இந்தாண்டு பதனீர் உற்பத்தி மார்ச் பாதியில் தான் தொடங்கியது.
இதனால், குறைவாகவே பதனீர் உற்பத்தியாகிறது.
பதனீர் கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததால், கருப்பட்டி தயாரிப்பிலே விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், குறைந்தளவு பதனீரே உற்பத்தியாவதால் கருப்பட்டி உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விவசாயி மாடசாமி கூறுகையில், "பனை ஏறுவதற்கு ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. ஒரு சிலரே ஏறுகின்றனர். கூலி அதிகம் கொடுத்தாலும், எதிர்பார்த்த அளவில் பதனீர் உற்பத்தி இல்லை. கிடைக்கும் பதனீரில் கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்கிறோம்,' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|