பதிவு செய்த நாள்
11 ஏப்2013
00:49
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமைஅன்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த ஐந்து வர்த்தக தினங்களின் தொடர் சரிவிற்கு பிறகு, 'சென்செக்ஸ்' 1.03 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் @Œர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள் துறையைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.இதற்கிடையே, அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற செவ்வாய்க்கிழமையன்று, 665 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, 'செபி' அமைப்பின் தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 187.97 புள்ளிகள் அதிகரித்து, 18,414.45 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,461.44 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,173.31 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், லார்சன் அண்டு டூப்ரோ, டி.சி.எஸ்., உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சன்பார்மா, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 63.60 புள்ளிகள் உயர்ந்து, 5,558.70 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,569.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,477.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|