பதிவு செய்த நாள்
16 ஏப்2013
01:29
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று, அன்னிய செலாவணி சந்தையில், இவ்வார வர்த்தகத்தின் துவக்கத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 26 காசுகள் குறைந்து, 54.78 ஆக இருந்தது.கடந்த வெள்ளியன்று, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 54.52 ரூபாயாக இருந்தது.இந்நிலையில், சென்ற மார்ச் மாதம், நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து, டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பில், சற்று முன்னேற்றம் காணப்பட்டது.
நேற்று வர்த்தகத்தின் இறுதியில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 54.63 ஆக நிலை பெற்றது.வங்கிகள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் அதிக அளவில், டாலரை வாங்கி வருவதால், சர்வதேச செலாவணிகளுக்கு எதிரான அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.அமெரிக்க பொருளாதாரம், மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதை அடுத்த, டாலரில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர வழி வகுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|