பதிவு செய்த நாள்
16 ஏப்2013
08:37
புதுடில்லி:ஒரு மாதத்தில், மூன்றாவது முறையாக, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1
ரூபாய் நேற்று குறைக்கப்பட்டது. பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு
கைவிட்
டதை அடுத்து, சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை
நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது,
பெட்ரோல்
விலையை, மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, கடந்த மார்ச், 16ம் தேதி,
பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதன்பின், கடந்த, 2ம் தேதி, லிட்டருக்கு, 85 காசுகள் குறைக்கப்பட்டன. ஒரே
மாதத்தில், மூன்றாவது முறையாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு, 1 ரூபாய்
குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இந்த
விலை குறைப்பால், உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரிகளும் குறையும் என்பதால்,
சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 1.26 ரூபாய் குறைந்துள்ளது. இதற்கு முன்,
சென்னையில், 70.34 ரூபாய்க்கு விற்ற ஒரு பெட்ரோல், நேற்று நள்ளிரவு முதல், 69.08
ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|