பதிவு செய்த நாள்
16 ஏப்2013
10:58
ராமநாதபுரம்: இறால் வரத்து குறைவு, மீன்பிடிக்க 45 நாள் தடை, எதிரொலியாக, ராமநாதபுரத்தில் மீன்கள் விலை, முதல் கட்டமாக, கிலோவிற்கு 10 ரூபாய் வீதம் உயர்ந்துள்ளது. இது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள், பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன. நேற்று (ஏப்.,15) முதல் மே 30 வரை, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக, விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டுப்படகு மற்றும் கரை வலையில், பிடிக்கப்பட்டு வரும் மீன்களே சந்தைக்கு வருகிறது. இந்த மீன்களின் விலை வழக்கத்தை விட, தற்போது கிலோவிற்கு ரூ.10 வீதம் உயர்ந்துள்ளது. விலை விபரம் (கிலோ): கடந்த வாரம் 400 ரூபாய்க்கு விற்ற சீலா 410 க்கும், 200க்கு விற்ற நண்டு 210க்கும், 110க்கு விற்ற விளமீன் 120க்கும், 200க்கு விற்ற பாறைமீன் 210க்கும், 80க்கு விற்ற நகர மீன் 90க்கும், 200க்கு விற்ற முரல் 210க்கும், 150க்கு விற்ற இறால் 260க்கும் விற்கப்படுகிறது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|