பதிவு செய்த நாள்
16 ஏப்2013
11:52
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 290 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை, தொடர் ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில், 20 காசுகள் சரிந்தது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 310 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 20 காசு குறைந்து, 290 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை விலை, சில வாரங்களாக, உயர்ந்து வந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 20 காசு சரிந்ததுள்ளது. நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 315, பெங்களூரு, 300, மைசூரு, 305, ஹைதராபாத், 255, மும்பை, 288, விஜயவாடா, 293, கோல்கத்தா, 305, பார்வாலா, 243, டில்லி, 255. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 52 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, கிலோ, 75 ரூபாயாக நிர்ணயம், செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|