பதிவு செய்த நாள்
19 ஏப்2013
00:57
குன்னூர்:குன்னூர் உபாசி தேயிலை ஏலத்தில், "அவட்டா பிராண்ட்' தேயிலை, 1 கிலோ, 1,750 ரூபாய்க்கு, விற்பனையானது.தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில், தரமான தேயிலைக்கு "கோல்டன் லீப் ஆப் இந்தியா' விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான போட்டி, கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி துவங்கியது. போட்டியில், 125 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 23 நிறுவனங்கள், விருதுகளை வென்றன.
போட்டியில் பங்கேற்ற நிறுவனங்களின் தேயிலை, தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் துவக்கப்பட்ட, புதிய மின்னணு ஏல மையத்தில்விற்பனை செய்யப் பட்டது.முதல் ஏலத்தில், 71,338 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இதில், 45,283 கிலோ இலை ரகமும், 26,055 கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும்.விற்பனைக்கு வந்த மொத்தம், 71,338 கிலோவில் 60 சதவீதம் தேயிலை தூள் விற்பனையானது. இலை ரகத்தில், 27,123 கிலோவும், டஸ்ட் ரகத்தில், 15,566 கிலோ தேயிலை தூளும் விற்பனையானது. இலை ரகம், ஒரு கிலோ சராசரியாக, 164.35 ரூபாய்க்கு விலை போனது. டஸ்ட் ரகத்துக்கு, 152.46 ரூபாய் கிடைத்தது.இலை ரகத்தில் அதிகபட்சமாக, பில்லிகொம்பை தேயிலை தொழிற்சாலையின், "அவட்டா பிராண்ட்' ஒரு கிலோ, 1,750 ரூபாய்க்கு விற்பனை யானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|