பதிவு செய்த நாள்
19 ஏப்2013
01:02
தேனி:தமிழகத்தில் மழையின்மையால், சிறு தானியங்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சிறு தானிய பயன்பாடும் உயர்ந்து வருகிறது.
தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், சிறு தானியங்கள் விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் மக்காச்சோளம், சோளம் அதிகமாகக் கிடைக்கிறது. கர்நாடகாவில் இருந்து, கேழ்வரகு மட்டும் வருகிறது. இதர சிறு தானியங்களின் வரத்து வெகுவாகக் குறைந்து விட்டது. எனவே, இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ கம்பு 17 ரூபாய், சோளம் 16 ரூபாய்,மக்காச்சோளம் 15 ரூபாய், சாமை அரிசி 55 ரூபாய், கேழ்வரகு 26 ரூபாய், வரகு அரிசி 45 ரூபாய், குதிரைவாலி அரிசி 50 ரூபாய் என, விற்கப்படுகிறது.இதனால், இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாட்டுத் தீவனங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ டீலக்ஸ் பொன்னி 32 ரூபாய், பி.பி.டி., 38 ரூபாய், கர்நாடகா பொன்னி புதுசு 36 ரூபாய், பழசு 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தேனி வியாபாரி சீனிவாசகன் கூறியதாவது: தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் சிறு தானியங்கள் விளைச்சல் இல்லாததால், சந்தையில் போதுமான அளவு இருப்பு இல்லை. தற்போதுள்ள இருப்பு, அடுத்த சீசன் வரை போதுமானதாக இருக்காதுஎன்பதால், விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|