பதிவு செய்த நாள்
19 ஏப்2013
02:41
புதுடில்லி:நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 10.50 லட்சம் கோடி ரூபாயாக (19,091 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 10.08 லட்சம் கோடி ரூபாயாக (18,330 கோடி டாலர்) இருந்தது.சென்ற நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 30,060 கோடி டாலராக (16.53 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 30,700 கோடி டாலராக (16.88 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.ஆக, சென்ற நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 1.76 சதவீதம் குறைந்து உள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
இறக்குமதி:நாட்டின் இறக்குமதி, சென்ற நிதியாண்டில், 0.44 சதவீதம் உயர்ந்து, 49,148 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பாஉள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த நாடுகளில், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்து போனது. அதேசமயம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி அதிகரித்ததால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததையடுத்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும்அதிகரித்துள்ளது. இதை தடுத்து நிறுத்திடும் வகையில், தங்கம்உள்ளிட்ட சில பொருட்களின் மீதான இறக்குமதி வரியை, மத்திய அரசு, அதிகரித்தது.நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, நேற்று,பல்வேறு சலுகை திட்டங்களைஅறிவித்தார்.இதில் முக்கியமாக, ஏற்றுமதி யாளர்கள், இறக்குமதி செய்து கொள்ளும் பொறியியல்சாதனங்களுக்கான முழு வரி விலக்கு, நடப்பு நிதியாண்டுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. இதர துறை நிறுவனங்களுக்கும், இந்த ஏற்றுமதி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உள்ள பொறியியல் துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 134 துணை பொறியியல் துறைகளுக்கு, 2 சதவீத வட்டி சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.நார்வே, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கு, வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு, ரசாயனம், மருந்து, ஜவுளி ஆகிய துறைகளுக்கும் ஊக்குவிப்பு சலு<கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.ஏற்றுமதியாளர்கள் பயனடையும் வகையில், ஏற்றுமதி சார்ந்த செலவினத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய, மேலும் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
விளையாட்டு சாதனங்கள்:குறிப்பாக, ஏற்றுமதியாளர்களின் இடர்பாட்டை களையும் வகையில், தேவையில்லாதகட்டுப்பாடுகள் மற்றும் ஆவண நடைமுறைகளை எளிமைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கைத்தறி, விளையாட்டு சாதனங்கள் போன்ற துறைகளை மேம்படுத்தும் வகையில்,இறக்குமதி சலுகைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, தேவையான குறைந்தபட்ச நில அளவு, பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை துறைக்கான, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, குறைந்தபட்ச நில அளவு கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படுகிறது.இவ்வாறு ஆனந்த் சர்மாதெரிவித்தார்.
ஏற்றுமதி நிலவரம்:கடந்த ஒரு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதியில்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற முழு நிதியாண்டில்,ஏற்றுமதி குறைந்துள்ளது.என்றாலும், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3,080 கோடி டாலராக ( 1.69 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், 2,880 கோடி டாலராக ( 1.58 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.ஆக, சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் நாட்டின் ஏற்றுமதி, 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் கூறியதாவது:ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், சென்ற மார்ச் மாதத்தில், ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ராவ் கூறினார்.
கச்சா எண்ணெய்சென்ற மார்ச் மாதத்தில்,நாட்டின் கச்சா எண்ணெய்இறக்குமதி, 16.56 சதவீதம் சரிவடைந்து, 1,332 கோடி டாலராக குறைந்துள்ளது. அதே சமயம், சென்ற நிதியாண்டில், இதன் இறக்குமதி, 9.22 சதவீதம் உயர்ந்து, 16,925 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 15,496 கோடி டாலராக இருந்தது.
எண்ணெய் அல்லாத இதர பொருட்களின் இறக்குமதி, சென்ற மார்ச் மாதத்தில், 5.41 சதவீதம் அதிகரித்து, 2,783 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், சென்ற முழு நிதியாண்டில், இவற்றின் இறக்குமதி, 3.62 சதவீதம் குறைந்து, 32,223 கோடி டாலராக குறைந்துள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் பொருளாதரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது. இது போன்ற காரணங்களால், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த அளவில் ஏற்றுமதிஅதிகரிக்கும் என,மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|