பதிவு செய்த நாள்
20 ஏப்2013
00:11
சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு, 216 ரூபாய் அதிகரித்து, 19,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சென்ற இரு தினங்களில் மட்டும், சவரனுக்கு, 328 ரூபாய் உயர்ந்துள்ளது.நேற்று, சென்னை சந்தையில், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 285 ரூபாய் உயர்ந்து, 26,370 ரூபாய்க்கு விற்பனையானது. அதேசமயம், ஒரு கிலோ வெள்ளியின் விலை, 190 ரூபாய் குறைந்து, 44,915 ரூபாய்க்கு விற்பனையானது.
மும்பை சந்தையில், 10 கிராம் சுத்த தங்கம், 26,395 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி, 46,125 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.விலை சரிவடைந்துள்ளதை சாதகமாக பயன்படுத்தி, மக்களிடையே தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்து உள்ளது. மேலும், முதலீட்டு நோக்கத்திலும், தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே, தங்கம் விலை உயர்ந்து வருகிறது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|