பதிவு செய்த நாள்
20 ஏப்2013
11:08
சென்னை: தமிழகத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வர, அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், முதல் தலைமுறை மற்றும் சமூக ஆதரவு குறைந்த தொழில் முனைவோருக்கு, கடன் உதவி அளிக்கிறது. கடந்த, 2012-13ம் நிதியாண்டில், உத்தேசித்த, 969.53 கோடி ரூபாயில், 60 சதவீதம், பொறியியல், மோட்டார் வாகன பாகங்கள், உணவு பதனிடும் மற்றும் ஜவுளி துறைகளுக்கு, கடனாக வழங்கி உள்ளது. இந்த நிறுவனம், 2013-14ம் ஆண்டு, 1,125 கோடி ரூபாயும், 2014-15ம் ஆண்டு, 1,250 கோடி ரூபாயும், கடனாக வழங்க, உத்தேசித்து உள்ளது. தமிழக அரசு, 2013-14ம் ஆண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வர, திட்டமிட்டு உள்ளது.
எரிபொருள் சிக்கனம்:சிமென்ட் ஆலையில், பழைய முறையில், மூலப்பொருட்களை கொண்டு செல்ல, அதிக மின்சாரம் செலவாகிறது. இதை தவிர்க்க, மூலப்பொருட்களை உயரே கொண்டு செல்ல (belt bucket elevator), 2 கோடி ரூபாய் செலவில், இரு இயந்திரங்கள் நிறுவப்படும்.15 ஆயிரம் டன்:ஆந்திர மாநில, நுகர்பொருள் வழங்கல் நிறுவனத்திற்கு, 15 ஆயிரம் டன், அயோடின் கலந்த தூள் உப்பை, தமிழ்நாடு உப்பு நிறுவனம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த பணியை, தமிழ்நாடு உப்பு நிறுவனம், துவங்கி உள்ளது.இந்த தகவல், தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|