நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 7,700 கோடி உயர்வுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 7,700 கோடி உயர்வு ... தங்கம் விலை மேலும் குறையும்: அமெரிக்க நிறுவனம் மதிப்பீடு தங்கம் விலை மேலும் குறையும்: அமெரிக்க நிறுவனம் மதிப்பீடு ...
தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.20 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:25

புதுடில்லி:நாட்டின் தொலைத் தொடர்பு (அலைபேசி+தொலைபேசி) வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற பிப்ரவரி மாதத்தில், 89.20 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த ஜனவரியில், 89.31 கோடியாக இருந்தது.ஆக, கணக்கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 0.13 சதவீதம் குறைந்து உள்ளது.நடவடிக்கை பயன்பாட்டில் இல்லாத அலைபேசி எண்களை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீக்கி வரும் நடவடிக்கையை அடுத்து, சென்ற 2012ம் ஆண்டு ஜூலை முதல், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்து உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பாண்டு ஜனவரியில், 86.26 கோடியாக இருந்த அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பிப்ரவரி மாதத்தில், 86.17 கோடியாக குறைந்துள்ளது. ஆக, கணக்கீட்டு மாதத்தில், அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 0.11 சதவீதம் குறைந்து உள்ளது.குறிப்பாக, யூனிநார் நிறுவன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 20.81 சதவீதம் சரிவடைந்து, 4.01 கோடியிலிருந்து, 3.17 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், ஐடியா செல்லுலார் நிறுவனம், 28.90 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டு உள்ளது. இதே போன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும், 24.28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து கொண்டுள்ளது.

வோடபோன்:இது தவிர, வோடபோன் (21.86 லட்சம்), ரிலையன்ஸ் (16.38 லட்சம்) மற்றும் பீ.எஸ்.என்.எல். (4.29 லட்சம்) உள்ளிட்ட நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளன.

அதேசமயம், ஏர்செல், டாட்டா டெலி சர்வீஸ், சிஸ்டமா சியாம் டெலி சர்வீஸ், வீடியோகான், எச்.எப்.சி.எல்., எம்.டி.என்.எல்., லூப் மொபைல் ஆகிய நிறுவனங்களின், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது என, "டிராய்' தெரிவித்துள்ளது.
அலைபேசி எண் மாறாமல், சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும் (எம்.என்.பி) திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 25 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதுவரையிலுமாக, 8.68 கோடி பேர், புதிய சேவை நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)