பதிவு செய்த நாள்
21 ஏப்2013
00:26
சென்னை:கடந்த மூன்று நாட்களில் மட்டும், தங்கத்தின் விலை, சவரனுக்கு, 352 ரூபாய் உயர்ந்து உள்ளது.சர்வதேச நிலவரங்களால், சில நாட்களாக குறைந்து வந்த, தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக உயர்ந்து வருகிறது.சென்னையில், கடந்த வியாழனன்று, 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,439 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,512 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம், ஒரு கிராம் தங்கம், 2,466 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,728 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று தங்கம், கிராமுக்கு, 17 ரூபாய் உயர்ந்து, 2,483 ரூபாய்க்கும், சவரனுக்கு, 136 ரூபாய் அதிகரித்து, 19,864 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,555 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 47.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,550 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த மூன்று நாட்களில் மட்டும், தங்கத்தின் விலை, கிராமுக்கு, 44 ரூபாயும், சவரனுக்கு, 352 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|