தங்கம் விலை மேலும் குறையும்: அமெரிக்க நிறுவனம் மதிப்பீடுதங்கம் விலை மேலும் குறையும்: அமெரிக்க நிறுவனம் மதிப்பீடு ... ஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனை ஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனை ...
தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
01:32

வாஷிங்டன்:அயல்நாட்டில் பணிபுரிவோர், தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என, உலக வங்கி தெரிவித்து உள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு, 6,900 கோடி டாலர் அளவிலான தொகையை அனுப்பி உள்ளனர்.பாகிஸ்தான்:வெளிநாடு வாழ்வோர், அதிக அளவிலான தொகையை, தாயகத்திற்கு அனுப்பியது குறித்த பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சென்ற ஆண்டில், வெளிநாடு வாழ் சீனர்கள், சீனாவிற்கு, 6,000 கோடி டாலரை அனுப்பியுள்ளனர். அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ் (2,400 கோடி டாலர்), மெக்சிகோ (2,300 கோடி டாலர்), நைஜீரியா மற்றும் எகிப்து (தலா, 2,100 கோடி டாலர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.சென்ற ஆண்டில், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை, 5.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,100 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வளர்ச்சி:இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக, 8.8 சதவீத வளர்ச்சி கண்டு, வரும், 2015ம் ஆண்டில், 51,500 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.சென்ற ஆண்டு, வெளிநாடுகளில் வாழும் தெற்காசியர்கள், தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை, 12.8 சதவீதம் அதிகரித்து, 10,900 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இது, கடந்த இரண்டு ஆண்டுகளில், சராசரியாக தலா, 13.8 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளிநாடு வாழ் தாயகத்தினரிடம் இருந்து பெறும் தொகை, குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டு உள்ளது.இது, தஜிகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 47 சதவீதமாக உள்ளது. அடுத்த இடங்களில், லைபீரியா (31 சதவீதம்), கிர்கிஸ்தான்
(29 சதவீதம்), லெசோதோ (27 சதவீதம்), மால்டோவா (23 சதவீதம்), நேபாளம் (22 சதவீதம்), சமோ (21 சதவீதம்) ஆகியவை உள்ளன.கடந்த, 2000ம் ஆண்டு முதல், வெளிநாடு வாழ் தாயகத்தினரிடம் இருந்து, வளரும் நாடுகள் பெற்ற தொகை, நான்கு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து உள்ளது.வளைகுடா நாடுகள்:சென்ற ஆண்டு, உலக நாடுகள், வெளிநாடு வாழ் தாயகத்தினரிடம் இருந்து பெற்ற தொகை, 51,400 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, கடந்த, 2000ம் ஆண்டு,13,200 கோடி டாலராக இருந்தது.எண்ணெய் வளம் மிக்க, வளைகுடா நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த சாதாரண தொழிலாளிகள் அதிக அளவில் உள்ளனர். அதுபோன்று, இந்தியாவைச் சேர்ந்த பல்துறை வல்லுனர்கள், அமெரிக்கா மற்றும் உயர் வருவாய் உள்ள நாடுகளில் உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், அவற்றின் வெளிநாடு வாழ் மண்ணின் மைந்தர்கள் மூலம் பெறும் தொகை அதிகரித்து வருகிறது.வேலைவாய்ப்பு:இது, வரும், 2015ம் ஆண்டு, 14 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில், ஓராண்டில், 100 கோடி பேர், அதாவது, ஏழு பேரில் ஒருவர், வேலைவாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கை சூழலை நாடி, வேறு நாட்டிற்கு செல்கின்றனர்.இவ்வாறு செல்வோர், சம்பாதிக்கும் பணத்தை தாய் நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு வரும் தொகை, அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் கல்வி, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கும், உதவுகிறது என, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)