தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் ... ஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனை ஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விதிமுறை மீறும் வங்கிகளுக்கு கடும் அபராதம்:ஒரு விதிமீறலுக்கு ரூ.1 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
01:33

புதுடில்லி:சட்ட விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு, ஒரு விதிமீறலுக்கு, ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.சென்ற பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், வங்கி ஒழுங்குமுறை சட்டம், 46ம் பிரிவில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பின், புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். இதுவரை, விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு, ஒரு விதிமீறலுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இனி, இது, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.இதன்படி, "வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வோம்' குறித்த விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், ஹவாலா பணப்பரிமாற்ற தடுப்பு, அன்னிய பங்குச்சந்தை நடைமுறை போன்றவற்றுக்கான விதிமீறல்களுக்கும் அபராதம் விதிக்க, சட்ட திருத்தம் வகை செய்கிறது.மும்பையில், ஒரே கிளையுடன் செயல்பட்டு வரும், அமெரிக்காவை சேர்ந்த ஜே.பி.மார்கன் வங்கி, இதர வங்கிகளுடனான நடைமுறையை மீறியதற்காக, 5 லட்சம் ரூபாய் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதே போன்று, "வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வோம்' (கே.ஒய்.சி.,) விதிமுறையை சரிவர பின்பற்றாத ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்கிற்கு, 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கி, 55 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.இதே போன்று, ஆக்சிஸ் பேங்க், பார்கிளேஸ், எச்.டீ.எப்.சி., பேங்க், கோட்டக் மகிந்திரா பேங்க், யெஸ் பேங்க் ஆகியவற்றுக்கு, தலா, 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.சிட்டி பேங்க், பீ.என்.பி., பரிபாஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க் ஆகியவையும், தலா, 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)