பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:33
புதுடில்லி:சட்ட விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு, ஒரு விதிமீறலுக்கு, ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.சென்ற பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், வங்கி ஒழுங்குமுறை சட்டம், 46ம் பிரிவில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பின், புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். இதுவரை, விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு, ஒரு விதிமீறலுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இனி, இது, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.இதன்படி, "வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வோம்' குறித்த விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், ஹவாலா பணப்பரிமாற்ற தடுப்பு, அன்னிய பங்குச்சந்தை நடைமுறை போன்றவற்றுக்கான விதிமீறல்களுக்கும் அபராதம் விதிக்க, சட்ட திருத்தம் வகை செய்கிறது.மும்பையில், ஒரே கிளையுடன் செயல்பட்டு வரும், அமெரிக்காவை சேர்ந்த ஜே.பி.மார்கன் வங்கி, இதர வங்கிகளுடனான நடைமுறையை மீறியதற்காக, 5 லட்சம் ரூபாய் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதே போன்று, "வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வோம்' (கே.ஒய்.சி.,) விதிமுறையை சரிவர பின்பற்றாத ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்கிற்கு, 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கி, 55 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.இதே போன்று, ஆக்சிஸ் பேங்க், பார்கிளேஸ், எச்.டீ.எப்.சி., பேங்க், கோட்டக் மகிந்திரா பேங்க், யெஸ் பேங்க் ஆகியவற்றுக்கு, தலா, 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.சிட்டி பேங்க், பீ.என்.பி., பரிபாஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க் ஆகியவையும், தலா, 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|