தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் ... ஹாங்காங் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம் ஹாங்காங் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம் ...
ஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
01:35

ஈரோடு:தமிழகத்தில், பறிமுதல் செய்யப்பட்ட ஈமு கோழிகளை, ஏலம் விட்ட போது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால், ஆந்திராவில் விளம்பரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம், பெருந்துறையில் இயங்கி வந்த, சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், முறைகேடு காரணமாக மூடப்பட்டது.நிறுவனங்கள் மூடல்:இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ஈமு மோசடி குறித்து, முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவை, ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் பகுதிகளில் இயங்கி வந்த சுவி, அல்மா, டி.வி.எஸ்., உட்பட ஈமு கோழி, நாட்டுக்கோழி, கொப்பரை நிறுவனங்கள் மூடப்பட்டன.இந்த வகையில், 8,320 முதலீட்டாளர்களின், 195 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, ஈரோடு குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, மோசடி நிறுவனங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.மோசடி நிறுவனங்களிடம் இருந்து, நிலப் பத்திரங்கள், கார், லாரி, இருŒக்கர வாகனம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அலுவலக பொருட்களை, குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.பல கோடி மோசடி வழக்கென்பதால், கோவையில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இதற்கிடையே, முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, ஈமு கோழிகளை, ஏலம் விட அரசு நடவடிக்கை எடுத்தது.ஆனால், ஈமு கோழிகள் ஏலத்துக்கு, தமிழகத்தில் வரவேற்பு இல்லாததால், ஈமு ஏலம் குறித்து ஆந்திராவில் விளம்பரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பராமரிப்பு:இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீŒõர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, 8,000க்கும் மேற்பட்ட, ஈமுகோழிகளை அரசு பராமரித்து வருகிறது.
இதற்காக, 2 கோடி ரூபாய் வரை, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் இழப்பை தடுக்கும் நோக்கில், அரசு உத்தரவுப்படி, சில மாதத்துக்கு முன் ஈமு கோழிகள் ஏலம் விடப்பட்டன.தீவனமின்மை, பராமரிப்பு குறைபாடு போன்றவற்றால், மெலிந்துள்ள ஈமு கோழிகளிடம் இருந்து, குறைந்த அளவிலேயே கொழுப்பு எடுக்க முடியும் என்பதால், அவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.எனவே, ஆந்திராவில், வணிகரீதியில் ஈமு கோழிகளை வளர்ப்போர் அதிகமாக உள்ளதால், அங்கு, இவற்றின் விற்பனை குறித்து, விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)