பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:35
ஈரோடு:தமிழகத்தில், பறிமுதல் செய்யப்பட்ட ஈமு கோழிகளை, ஏலம் விட்ட போது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால், ஆந்திராவில் விளம்பரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம், பெருந்துறையில் இயங்கி வந்த, சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், முறைகேடு காரணமாக மூடப்பட்டது.நிறுவனங்கள் மூடல்:இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ஈமு மோசடி குறித்து, முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவை, ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் பகுதிகளில் இயங்கி வந்த சுவி, அல்மா, டி.வி.எஸ்., உட்பட ஈமு கோழி, நாட்டுக்கோழி, கொப்பரை நிறுவனங்கள் மூடப்பட்டன.இந்த வகையில், 8,320 முதலீட்டாளர்களின், 195 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, ஈரோடு குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, மோசடி நிறுவனங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.மோசடி நிறுவனங்களிடம் இருந்து, நிலப் பத்திரங்கள், கார், லாரி, இருŒக்கர வாகனம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அலுவலக பொருட்களை, குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.பல கோடி மோசடி வழக்கென்பதால், கோவையில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இதற்கிடையே, முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, ஈமு கோழிகளை, ஏலம் விட அரசு நடவடிக்கை எடுத்தது.ஆனால், ஈமு கோழிகள் ஏலத்துக்கு, தமிழகத்தில் வரவேற்பு இல்லாததால், ஈமு ஏலம் குறித்து ஆந்திராவில் விளம்பரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பராமரிப்பு:இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீŒõர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, 8,000க்கும் மேற்பட்ட, ஈமுகோழிகளை அரசு பராமரித்து வருகிறது.
இதற்காக, 2 கோடி ரூபாய் வரை, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் இழப்பை தடுக்கும் நோக்கில், அரசு உத்தரவுப்படி, சில மாதத்துக்கு முன் ஈமு கோழிகள் ஏலம் விடப்பட்டன.தீவனமின்மை, பராமரிப்பு குறைபாடு போன்றவற்றால், மெலிந்துள்ள ஈமு கோழிகளிடம் இருந்து, குறைந்த அளவிலேயே கொழுப்பு எடுக்க முடியும் என்பதால், அவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.எனவே, ஆந்திராவில், வணிகரீதியில் ஈமு கோழிகளை வளர்ப்போர் அதிகமாக உள்ளதால், அங்கு, இவற்றின் விற்பனை குறித்து, விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|