தங்கம் விலை சவரனுக்கு ரூ.280  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஏப்ரல் 24ல் கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
14:34

சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில், பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. சாம்சங் நிறுவனத்திற்கு முக்கிய ஒரு சந்தையாக இந்தியா விளங்குகிறது. விலையைப் பொறுத்தவரை ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம். பனி படர்ந்த கருப்பு மற்றும் வெள்ளை என இரு மாடல்களில் இது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனுக்குப் போட்டியாக உள்ள, எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ரூ. 42,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
இதற்கு முன்னர் வந்த காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போனுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் புதிய போனாக இருக்காது. முக்கியமான சில செயல்முறைகளில், அதற்கான பொருட் களில் உயர்நிலையில் உள்ளவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் 4.1 இருந்த இடத்தில் ஆண்ட்ராய்ட் 4.2.2 தரப்படுகிறது. ஸ்நாப் ட்ரேகன் எஸ் 4 ப்ராசசருக்குப் பதிலாக, 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் எக்ஸைனோஸ் ப்ராசசர் உள்ளது. ராம் நினைவகம் 1 ஜிபியிலிருந்து 2 ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.8 அங்குல கொரில்லா கிளாஸ் 2, ஐந்து அங்குல கொரில்லா கிளாஸ் 3 ஆக டிஸ்பிளே திரை உள்ளது. இதில் ஸ்டோரேஜ் வசதி 64 ஜிபி கொண்ட மாடலும் கிடைக்கிறது. 8 எம்பி / 1.9 எம்பி கேமராக்களுக்குப் பதிலாக, 13 எம்.பி/2 எம்.பி திறன் கொண்ட கேமராக்கள் இருக்கின்றன. 2100 mAh திறன் கொண்ட பேட்டரிக்குப் பதிலாக, 2,600 mAh திறன் பேட்டரி இடம் பெறுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)