பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:33
புதுடில்லி:இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற 2012-13ம் நிதி யாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், 212 கோடி டாலராக (11,660 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது.
இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 195 கோடி டாலர் (10,725 கோடி ரூபாய்) அளவிற்கு இருந்தது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா லோக் சபாவில் தெரிவித்தார்.இருப்பினும், இந்தியா - பாகிஸ் தான் இடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 237 கோடி டாலர் (13,035 கோடி ரூபாய்) என்ற அளவில் சிறப்பாக அதிகரித்து காணப்பட்டது.சென்ற நிதியாண்டின், முதல் 11 மாத காலத்தில் (ஏப்.,-பிப்.,), பாகிஸ்தான் நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி, 164 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2011-12ம் முழு நிதியாண்டில், 153 கோடி டாலர் என்ற அளவிற்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில், பாகிஸ்தானில் இருந்து, நம்நாடு மேற்கொண்ட இறக்குமதி, 48.75 கோடி டாலராக மிகவும் அதிகரித்துள்ளது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 42.18 கோடி டாலராக இருந்தது என, ஆனந்த் சர்மா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|