பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:34
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, 32,970 கோடி டாலராக (18,13,350 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு மதிப்பீடு செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 30,100 கோடி டாலராக இருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் இறக்குமதி, 54,270 கோடி டாலராக (29,84,850 கோடி ரூபாய்) இருக்கும். இது, கடந்த நிதியாண்டில், 50,110 கோடி டாலராக இருந்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், 2011-12 மற்றும் 2012-13ம் நிதியாண்டுகளில், ஏற்றுமதி சரிவடைந்திருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 21,300 கோடி டாலராக (11,71,500 கோடி ரூபாய்) இருக்கும். இது, கடந்த நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி டாலராக காணப்பட்டது.கடந்த நிதியாண்டில், பொறியி யல் சாதனங்கள், கைத்தறி ஜவுளிகள், ஆயத்த ஆடைகள் போன்றவற்றின் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளானது. இவை தவிர, நவரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியும் குறைந்தே இருந்தது.
நடப்பு 2013ம் ஆண்டில், சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இதனால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, அதிகரிக்க வாய்ப்புள்ளது என, இந்த ஆலோசனை குழு மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|