இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர்இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் ... பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 32,970 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
00:34

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, 32,970 கோடி டாலராக (18,13,350 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு மதிப்பீடு செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 30,100 கோடி டாலராக இருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் இறக்குமதி, 54,270 கோடி டாலராக (29,84,850 கோடி ரூபாய்) இருக்கும். இது, கடந்த நிதியாண்டில், 50,110 கோடி டாலராக இருந்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், 2011-12 மற்றும் 2012-13ம் நிதியாண்டுகளில், ஏற்றுமதி சரிவடைந்திருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 21,300 கோடி டாலராக (11,71,500 கோடி ரூபாய்) இருக்கும். இது, கடந்த நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி டாலராக காணப்பட்டது.கடந்த நிதியாண்டில், பொறியி யல் சாதனங்கள், கைத்தறி ஜவுளிகள், ஆயத்த ஆடைகள் போன்றவற்றின் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளானது. இவை தவிர, நவரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியும் குறைந்தே இருந்தது.
நடப்பு 2013ம் ஆண்டில், சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இதனால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, அதிகரிக்க வாய்ப்புள்ளது என, இந்த ஆலோசனை குழு மதிப்பீடு செய்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)