இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர்இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் ... பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு பங்கு சார்ந்த திட்டங்களில்... பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
00:41

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், 43 பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகித்த சொத்து மதிப்பில், 4,883 கோடி ரூபாய் குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' 8 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் சென்ற நிதியாண்டில், எல் அண்டு டி மியூச்சுவல் பண்டு, ஐ.டீ.எப்.சி மியூச்சுவல் பண்டு, ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு ஆகிய நிறுவனங்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், அதிக முதலீட்டாளர்களை ஈர்த்து உள்ளன.எல் அண்டு டி மியூச்சுவல் பண்டு நிறுவனம், பிடிலிட்டி மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு, 4,337 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே பிரிவில், ஐ.டீ.எப்.சி. எம்.எப்.,, ஆக்சிஸ் எம்.எப்., ஆகிய நிறுவனங்கள், முறையே 580 கோடி ரூபாய் மற்றும் 472 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட,43 பரஸ்பர நிதி நிறுவனங்களில்,24 நிறுவனங்கள்,பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சரிவடைந்து உள்ளது. 16 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல்,கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனங்கள்,பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், முறையே, 131 கோடி மற்றும் 101 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
எச்.டீ.எப்.சி மியூச்சுவல் பண்டுபரஸ்பர நிதி துறையில், மிக அதிக அளவிலான சொத்து மதிப்பை எச்.டீ.எப்.சி மியூச்சு வல் பண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. எனினும், இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 26 கோடி ரூபாய் அளவிற்கே அதிகரித்துள்ளது.
மேற்கண்ட பிரிவில், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், மிக அதிக அளவிலான சொத்து மதிப்பை(3,212 கோடி ரூபாய்) இழந்துள்ளது. அடுத்த இடங்களில், சுந்தரம் மியூச்சுவல் பண்டு (1,566 கோடி ரூபாய்), டீ.எஸ்.பி பிளாக்ராக் மியூச்சுவல் பண்டு (1,362 கோடி ரூபாய்), யூ.டி.ஐ மியூச்சுவல் பண்டு (893 கோடி ரூபாய்), எஸ்.பீ.ஐ மியூச்சுவல் பண்டு (881 கோடி ரூபாய்) மற்றும் டாட்டா மியூச்சுவல் பண்டு (879 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
ரிலையன்ஸ் எம்.எப்., பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும், சொத்து மதிப்பு பெருமளவில் குறைந் துள்ள போதிலும், இப்பிரிவில், தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த இடங் களில், யூ.டி.ஐ. எம்.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ.எம்.எப்., எஸ்.பீ.ஐ.எம்.எப்., பிராங்ளின் டெம்பிள்டன் எம்.எப் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
டீ.எஸ்.பி பிளாக்ராக் எம்.எப்., எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், பிர்லா சன்லைப் எம்.எப்., ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.பங்குச்சந்தைசென்ற நிதியாண்டில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, ஒட்டுமொத்த அளவில், 12,931 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு செப்டம்பரில், பங்குச் சந்தை எழுச்சி காணத் துவங்கிய பின்னர், முதலீட்டாளர்கள், லாபம் கருதி, அதிக அளவில் கணக்கை முடித்து, பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.சென்ற ஆண்டு டிசம்பரில் மட்டும், 6 லட்சம் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)