பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:50
கோல்கட்டா:நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில் உருக்கு உற்பத்தி, 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 68.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 64.40 லட்சம் டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்ற ஜனவரியில், உருக்கு உற்பத்தி, 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது. எனி னும், இந்த உற்பத்தி, பிப்ரவரி மாதத்தில்,0.5 சதவீதம் சரிவடைந்து, 62 லட்சம் டன்னாக குறைந்து போனது.உலக உருக்கு உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில், 1 சதவீத அளவிற்கு மட்டுமே உயர்ந்து, 13.35 கோடி டன்னிலிருந்து, 13.49 கோடி டன்னாக சற்று அதிகரித்துள்ளது.
இதில் சீனாவின் உருக்கு உற்பத்தி, 6.63 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாத உருக்கு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது, 6.6 சதவீத வளர்ச்சியாகும்.நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், உலக உருக்கு உற்பத்தி, 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 38 கோடி டன்னிலிருந்து, 38.87 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, உலக உருக்கு கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|