பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:54
புதுடில்லி:சொகுசு காருக்கு உயர்த்தப்பட்ட, 3 சதவீத உற்பத்தி வரியை திரும்பப் பெற வேண்டும் என, நிதியமைச்சகத் திற்கு, மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சர் பிரபுல் படேல் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது:
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், "எஸ்.யு.வி' எனப்படும், பன்முக பயன்பாட்டு வாகனங்களுக்கான உற்பத்தி வரி, 27 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட வரியை திரும்பப் பெற வேண்டும் அல்லது 10 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கு, கூடுதல் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன துறையின் வளர்ச்சி குன்றியுள்ளது. வரி உயர்வால், இது மேலும் பாதிப்பிற்கு உள்ளாகும். கிராமப் புறங்கள் மற்றும் புற நகரங்களில் "எஸ்.யு.வி' வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அப்பகுதிகளை சேர்ந்த நுகர்வோர், வரி உயர்வால் பாதிக்கப்படுவர்.பன்முக பயன்பாட்டு வாகனம் என்பதற்கான அளவீடு, மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, வாகன வரி உயர்வை நிதி அமைச்சகம் கைவிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற மார்ச்சில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. சென்ற பிப்ரவரியில், பயணிகள் கார் விற்பனை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.எரிபொருள் விலை உயர்வு, வட்டி அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், வாகன துறையின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|