பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:56
புதுடில்லி:மத்திய அரசு, சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் மீதான இறக்குமதி வரியை, 12.50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விஜயா தத்தா கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் மீது, 7.5 சதவீதமும்,கச்சா தாவர எண்ணெய் மீது, 2.5 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.எனவே,இவ்விரு எண்ணெய் இறக்கு மதிக்கு இடையிலான வரி வித்தியாசம், 5 சதவீத அளவிற்கே உள்ளது. இதனால், விலை குறைந்த சுத்திகரிக் கப்பட்ட பாமாயில் அதிகம்இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற பிப்ரவரி மாதத்தில், 1,16,237 டன்னாக இருந்த, சுத்திகரிக்கப் பட்ட பாமாயில் இறக்குமதி, கடந்த மார்ச் மாதத்தில், 1,37,407 டன்னாக அதிகரித்துள்ளது. இது, உள்நாட்டில், இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது.எனவே, மத்திய அரசு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை, தற்போதைய நிலையிலிருந்து (7.5 சதவீதம்),5 சதவீதம் உயர்த்தி, 12.5 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்க வேண்டும்.மேலும், வரி விதிப்பு இல்லாமல், புண்ணாக்கு இறக்குமதி செய்து கொள்ளும் கால அவகாசத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு விஜயா தத்தா கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|