இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர்இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் ... பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
"சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
00:56

புதுடில்லி:மத்திய அரசு, சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் மீதான இறக்குமதி வரியை, 12.50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விஜயா தத்தா கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் மீது, 7.5 சதவீதமும்,கச்சா தாவர எண்ணெய் மீது, 2.5 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.எனவே,இவ்விரு எண்ணெய் இறக்கு மதிக்கு இடையிலான வரி வித்தியாசம், 5 சதவீத அளவிற்கே உள்ளது. இதனால், விலை குறைந்த சுத்திகரிக் கப்பட்ட பாமாயில் அதிகம்இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற பிப்ரவரி மாதத்தில், 1,16,237 டன்னாக இருந்த, சுத்திகரிக்கப் பட்ட பாமாயில் இறக்குமதி, கடந்த மார்ச் மாதத்தில், 1,37,407 டன்னாக அதிகரித்துள்ளது. இது, உள்நாட்டில், இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது.எனவே, மத்திய அரசு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை, தற்போதைய நிலையிலிருந்து (7.5 சதவீதம்),5 சதவீதம் உயர்த்தி, 12.5 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்க வேண்டும்.மேலும், வரி விதிப்பு இல்லாமல், புண்ணாக்கு இறக்குமதி செய்து கொள்ளும் கால அவகாசத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு விஜயா தத்தா கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)