கார்களில் கறுப்பு கண்ணாடிஇருந்தால் காப்பீடு ரத்துகார்களில் கறுப்பு கண்ணாடிஇருந்தால் காப்பீடு ரத்து ... இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் துவங்குகிறது இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் ... ...
அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
01:31

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, 1.98 லட்சம் கோடி ரூபாயாக (3,600 கோடி டாலர்) அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்து உள்ளது.
திட்டங்கள்:மத்திய அரசு, அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக, நடப்பு நிதிஆண்டில், உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, நடப்பு நிதிஆண்டில், நிகர அளவில் அன்னிய நேரடி முதலீடு 2,400 கோடி டாலராக உயரும் என, தெரிகிறது.கடந்த 2007-08 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு, முறையே, 3,300 கோடி டாலர் மற்றும் 3,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.இதே நிதியாண்டுகளில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு, முறையே, 1,400 கோடி டாலர் மற்றும் 1,900 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.
சென்ற 2012-13ம் நிதியாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு, 2,100 கோடி டாலர் என்ற அளவில் சரிவடைந்திருந்தது. இது, முந்தைய 2011-12ம் நிதிஆண்டில், 2,900 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. இதே காலத்தில், இந்தியாவில்இருந்து, வெளி நாடுகளில் மேற்கொள்ளும் அன்னிய நேரடி முதலீடும், 2,100 கோடி டாலரில்இருந்து, 1,500 கோடி டாலராக குறைந்து போனது.
மதிப்பீடு:இந்நிலையில், சென்ற 2012-13ம் முழு நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,600 கோடி டாலரை எட்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு, 800 கோடி டாலரை எட்டியிருக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்து உள்ளது.
சுணக்க நிலை:இந்திய பொருளாதாரத்தின் சுணக்க நிலையால், சென்ற நிதியாண்டின், முதல் காலாண்டில் குறைந் திருந்த அன்னிய நேரடி முதலீடு, பின்னர் இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் அதிகரிக்கத் துவங்கியது.இதையடுத்து, கடைசி மூன்று காலாண்டுகளில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 1,600 கோடி டாலரை தாண்டிஇருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)