அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும்அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும் ... இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் துவங்குகிறது இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 227 புள்ளிகள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
01:38

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, கடைசி அரை மணி நேரத்தில், பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இதையடுத்து, "சென்செக்ஸ்' 1.19 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்ககூடும் என்ற எதிர்பார்ப்பும், வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது.ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு 2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 0.1 சதவீதம் என்ற குறைந்த அளவில் தான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையிலும், கடந்த இரு தினங்களாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.
நேற்றைய பங்கு வர்த்தகத்தில், மருந்து, வங்கி, வாகனம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 227.49 புள்ளிகள் அதிகரித்து, 19,406.85 புள்ளிகளில் நிலை பெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,434.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,192.11 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங் களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 79.40 புள்ளிகள் உயர்ந்து, 5,916,30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,924.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக,5853.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)