அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும்அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும் ... இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் துவங்குகிறது இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இரும்பு தாது உற்பத்தி 10 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
01:43

கர்நாடகாவில், சுரங்க நடவடிக்கைகள் மீதான தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து, இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2012-13ம் நிதிஆண்டில், நாட்டின் இரும்புத் தாது உற்பத்தி, 14.7 சதவீதம் சரிவடைந்து, 14.50 கோடி டன்னாக குறைந்தது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில்,17 கோடி டன்னாக இருந்தது.
கர்நாடகாவில், மூடப்பட்ட சுரங்கங்கள் திறக்கப்பட்டு செயல்பட ஆறு மாதங்கள் ஆகும் என, தெரிகிறது. இதை யடுத்து, இம்மாநிலத்தின் இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதிஆண்டில், 1.70 கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதேசமயம், கோவாவில், மூடப்பட்ட சுரங்கங்களை திறப்பது தாமதமாகும் என்பதால், இம்மாநிலத்தின் இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில் துவங் கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா மீண்டும் சுரங்க நடவடிக்கைகளை துவங்கும் பட்சத்தில், நாட்டின் மொத்த இரும்புத் தாது உற்பத்தி, 16 -17 கோடி டன்னாக உயரும் என, டில்லியை சேர்ந்த ஓர் டீம் நிறுவனத்தின் ஆய்வு பிரிவு தலைவர் பிரகாஷ் துவாரி தெரிவித்தார்.உள்நாட்டில், மிக குறைந்த அளவாக, 2004-05ம் நிதியாண்டில், 14.5 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது. மிக அதிக அளவாக, 2009-10ம் நிதியாண்டில், 22 கோடி டன் உற்பத்தி ஆனது.
நாட்டின் ஒட்டுமொத்த இரும்புத் தாது உற்பத்தியில், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்டு ஆகிய மாநிலங்கள், முன்ன ணியில் உள்ளன.இந்தியாவின் மொத்த இரும்புத் தாது உற்பத்தியில்,ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் பங் களிப்பு, 80 சதவீதமாக உள்ளது. இதில், ஒடிசாவின் பங்களிப்பு மட்டும், 50 சதவீதம் என்பது, குறிப்பிடத்தக்கது. கர்நாடகா மற்றும் ஜார்கண்டு மாநிலங்களின் இரும்புத்தாது உற்பத்தி, தலா 1.7 - 1.9 கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)