பதிவு செய்த நாள்
26 ஏப்2013
01:43
கர்நாடகாவில், சுரங்க நடவடிக்கைகள் மீதான தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து, இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2012-13ம் நிதிஆண்டில், நாட்டின் இரும்புத் தாது உற்பத்தி, 14.7 சதவீதம் சரிவடைந்து, 14.50 கோடி டன்னாக குறைந்தது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில்,17 கோடி டன்னாக இருந்தது.
கர்நாடகாவில், மூடப்பட்ட சுரங்கங்கள் திறக்கப்பட்டு செயல்பட ஆறு மாதங்கள் ஆகும் என, தெரிகிறது. இதை யடுத்து, இம்மாநிலத்தின் இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதிஆண்டில், 1.70 கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதேசமயம், கோவாவில், மூடப்பட்ட சுரங்கங்களை திறப்பது தாமதமாகும் என்பதால், இம்மாநிலத்தின் இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில் துவங் கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா மீண்டும் சுரங்க நடவடிக்கைகளை துவங்கும் பட்சத்தில், நாட்டின் மொத்த இரும்புத் தாது உற்பத்தி, 16 -17 கோடி டன்னாக உயரும் என, டில்லியை சேர்ந்த ஓர் டீம் நிறுவனத்தின் ஆய்வு பிரிவு தலைவர் பிரகாஷ் துவாரி தெரிவித்தார்.உள்நாட்டில், மிக குறைந்த அளவாக, 2004-05ம் நிதியாண்டில், 14.5 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது. மிக அதிக அளவாக, 2009-10ம் நிதியாண்டில், 22 கோடி டன் உற்பத்தி ஆனது.
நாட்டின் ஒட்டுமொத்த இரும்புத் தாது உற்பத்தியில், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்டு ஆகிய மாநிலங்கள், முன்ன ணியில் உள்ளன.இந்தியாவின் மொத்த இரும்புத் தாது உற்பத்தியில்,ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் பங் களிப்பு, 80 சதவீதமாக உள்ளது. இதில், ஒடிசாவின் பங்களிப்பு மட்டும், 50 சதவீதம் என்பது, குறிப்பிடத்தக்கது. கர்நாடகா மற்றும் ஜார்கண்டு மாநிலங்களின் இரும்புத்தாது உற்பத்தி, தலா 1.7 - 1.9 கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|