பதிவு செய்த நாள்
27 ஏப்2013
00:44
புதுடில்லி:நாட்டின் சர்க்கரை உற்பத்தி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஓர் ஆண்டிற்கு தேவையான, 2.20 கோடி டன்னை விட அதிகரிக்கும் என, மத்திய உணவு துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (செப்.,-அக்.,), தற்போது வரை, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.40 கோடி டன்னை எட்டியுள்ளது. இது, மதிப்பீட்டு அளவான, 2.46 கோடி டன்னை விடவும், சென்ற, பருவத்தின் உற்பத்தியை (2.60 கோடி டன்) விடவும் குறைவாகும்.
வரும் மே மாதம், மூன்றாவது வாரத்தில், கான்பூர் சர்க்கரை மையத்தில் சர்க்கரை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், பல்வேறு நிறுவனங்களும், வல்லுனர்களும் பங்கேற்று, சர்க்கரை துறை வளர்ச்சிக்கான திட்டங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வர். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|