பதிவு செய்த நாள்
27 ஏப்2013
00:56
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம்,வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமை மிகவும் மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது.
அதே சமயம், அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வரும் வாரத்தில், அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள், உருக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 120.13 புள்ளிகள் சரிவடைந்து 19,286.72 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,384.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,249.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 44.85 புள்ளிகள் சரிவுஅடைந்து, 5,871.45 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,907.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,860.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|