பதிவு செய்த நாள்
27 ஏப்2013
10:25
சென்னை: ""அரசின் வருவாய் பெருமளவு குறையும் என்பதால், சமையல் எண்ணெய் மீதான, 5 சதவீத வரியை ரத்து செய்ய முடியாது,''என, வணிகவரித் துறை அமைச்சர், ரமணா கூறினார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., -என்.எஸ்.என்.நடராஜ்: தமிழகத்தில், எண்ணெய் வித்துக்களுக்கு விதிக்கப்படும், 5 சதவீத வரியை, அரசு குறைக்குமா?
அமைச்சர் ரமணா: வரியை குறைக்கும் பரிசீலனை, அரசிடம் இல்லை.
என்.எஸ்.என்.நடராஜ்: கேரளாவில் தேங்காய் எண்ணெய் வித்து மற்றும் தேங்காய் எண்ணைய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்தில் சமையல் எண்ணெய் மீது, விதிக்கப்படும் வரியை ரத்து செய்யவேண்டும். வரி விதிப்பால், வரி ஏய்ப்பு தான் நடக்கிறது. வரியை குறைத்தால், உண்மையான, வணிகத்துக்கான வரியை, வியாபாரிகள் செலுத்துவர். இதன்மூலம், அரசின் வரி வருவாய் அதிகரிக்கும்.
அமைச்சர் ரமாணா: எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மீது, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, குஜராத் போன்ற மாநிலங்களில், 5.5 - 5 சதவீத வரியை, அந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. கேரளாவில், மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வரியை ரத்து செய்தால், அரசுக்கு பெரும் வாருவாய் இழப்பு ஏற்படும். வரி விதிப்பதால், வரி ஏய்ப்பு நடக்கிறது என, கூறுவதை ஏற்க முடியாது. எனவே, சமையல் எண்ணெய் மீதான, வரியை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு, விவாதம் நடந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|