தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அட்டகாசமான புதிய தோற்றமும் செயல் திறனும் போக்ஸ்வேகனின் ஜெட்டா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2013
14:49

ஜெர்மானிய வாகன உற்பத்தியாளரான போக்ஸ்வேகன், "ஜெட்டா'வை 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அது முதல் ஒரு சில புதிய மாறுதல்களுடன் மெருகேறிக் கொண்டே வருகிறது. போக்ஸ்வேகன் ஜெட்டா. தற்போது லக்சுரி செடானான ஜெட்டாவில் பெட்ரோல் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது போக்ஸ்வேகன். ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும் இப்பெட்ரோல் வேரியன்ட் ட்ரென்ட்லைன் மற்றும் கம்போர்ட்லைன் என்ற இரண்டு மாடல்களில் வருகிறது.
தற்போதைய புதிய ஜெட்டா பெட்ரோல் வெர்ஷனையும் சேர்த்து, மொத்தம், 6 மாடல்களில் 2 பெட்ரோல் மாடல்களும், 4 டீசல் மாடல்களும், பல புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது.
ஜெட்டாவின் பெட்ரோல் இன்ஜினை எடுத்துக் கொண்டால், போக்ஸ்வேகனின் ட்ரேட் மார்க்கனை டி.எஸ்.ஐ இன்ஜின், 121 பி.எச்.பி பவரும், 200 என்.எம். மார்க்கும் வழங்கக் கூடியதாக உள்ளது. 112 லிட்டர், 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ இன்ஜினான இது, 6 ஸ்பீட் மானுவல் டிரான்ஸ்மிஷன் இயர் பாக்சுடன் வந்துள்ளது.
\ஆங்காங்கு அளவால் செதுக்கியது போல் உள்ளது, இதன் அழகிய வெளிப்புற வடிவமைப்பு. டர்ன் இன்டிகேட்டர் கொண்ட வடிவமைப்பு மாற்றப்பட்ட வெளிப்புற ரியர் வ்யூ மிர்ரர் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேவையான அளவும் அதிகபட்ச வெளிச்சமும் கொண்ட அழகான ஹேலோஜென் ஹெட்லைட்டும், அட்லன்ட்டா மற்றும் நவாரா என்ற இரண்டு நவீன வடிவமைப்புடனான அலாய் வீல்களும் இதன் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. இரண்டு அலாய் வீல்களிலும், 205/55 ஆர்16 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் "ஆன்டி தெப்ட்' வீல் போல்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.
ஜெட்டாவின் உட்புறம் அதிக இடவசதி செய்யப்பட்டுள்ளது. இதன் டாஷ்போர்டிங். முக்கிய தகவல்களும் மல்டி பங்ஷனல் டிஸ்ப்ளேவும், ஆர்.சி.டி 510 டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொண்ட மியூசிக் சிஸ்டமும் எம்.பி 3 வசதியுடன், 6 "சிடி'யை மாற்றக்கூடியதாய் உள்ளதும் மற்றும் 12 வகையில் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கையும், மின்னணுவால் இயங்கும் க்ரூயில் கன்ட்ரோலும் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள பேடில், ஷிப்ட் கொண்ட ஸ்டியரிங் வீலின் மூலமே, கியர் ஷிப்ட் செய்துக் கொள்ளக் கூடிய வசதியுள்ளது. ஓட்டுனருக்கு மகிழ்ச்சியளிக்ககூடிய ஓரு அம்சமாகும்.
ஜெட்டாவின் பாதுகாப்பு அம்சங்கள் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாக உள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ சமிக்ஞைகளை அளிக்கும் பார்க்கிங் சென்சார் மிகவும் உபயோகமானது. தரமான ஏர்-பேக் முழுமையான பாதுகாப்பையும், இ.எஸ்.பி என்ற எலக்ட்ரானிக் ஸ்டெவிலிட்டி ப்ரொக்ரான், ஸ்திரத்தன்மையையும் சிறப்பாக வழங்குகிறது.
மொத்தத்தில், புதிய ஜெட்டா ஜெர்மானிய தொழில்நுட்ப மேன்மையையும், இந்த ஐரோப்பிய கலா ரசனையின் சாயலை, தோற்றத்திலும் சேர்ந்து, இந்திய மக்களின் மனதை கவர வந்துள்ளது.
ஜெட்டாவின் டீசல் இன்ஜின், 2 லிட்டர் டி.டீ.ஐ இன்ஜின், 6 ஸ்பீட் மானுவல் இயர் பாக்ஸ் ட்ரென்ட்லைன், கம்போர்ட்லைன் மற்றும் ஹைலைனிலும் புதிய ஹைலைன் மாடலில், 6 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் டி.எஸ்.ஜி கியர் பாக்சுடன் வெளி வந்துள்ளது. இந்த டீசல் இன்ஜின்கள் எரிபொருள் சிக்கனம், அதிர்வு மற்றும் சத்தமில்லாத சுகமான பயணத்துடன், 140 பி.எஸ்., பவரை, 4200 ஆர்.பி.எம்மிலும் அதிக பட்ச டர்க்காக, 320 என்.எம்., 1750-2000 ஆர்.பி.எம்மிலும் வழங்கும், சிறந்த செயல்திறனையும் கொண்டுள்ளது. இதன் டி.எஸ்.ஜி கியர் பாக்சினால், கியர் ஷிப்ட்டின் போது, பவர் லாஸ் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)