பதிவு செய்த நாள்
28 ஏப்2013
00:48
விருதுநகர்:சமையல் எண்ணெய் உற்பத்தி, சர்வதேச அளவில் அதிகரித்து இருப்பதால், இதன் விலை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் சோயா உற்பத்தி, கச்சா பாமாயில் உற்பத்தியும் உயர்ந்துள்ளதால், சர்வதேச சந்தையில் பாமாயில் விலை குறைந்துள்ளது. உள் நாட்டில் பருவ மழை பொய்த்ததால்,போதிய அளவு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லை. நடப்பு பருவமான அக்டோபர், செப்டம்பரில் சமையல் எண்ணெய் இறக்குமதி ,1.05 கோடி டன்னாக அதிகரிக்கும் என ,எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பருவத்தை விட 5 லட்சம் டன் அதிகமாக இருக்கும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. இது சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சாதகமானது. சர்வதேச சந்தையில் ஒரு டன் சோயா எண்ணெய் 1080 டாலராக உள்ளது. சோயா எண்ணெய் டன்னுக்கு 100 டாலர் குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து, 1 030 டாலராக சரிவடையும் நிலை உள்ளது. ஒரு டன் சூரியகாந்தி எண்ணெய் விலை சரிந்து, 1180 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா பாமாயில் வரத்து அதிகரித்து, ஒரு டன் கச்சா பாமாயில் 2000 மலேசியாவின் ரிங்கிட் என்றளவில் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில், சமையல் எண்ணெய் விலை 5 முதல் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|