பதிவு செய்த நாள்
28 ஏப்2013
00:51
புதுடில்லி;பொதுத் துறையைச் சேர்ந்த நால்கோ நிறுவனம், அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 1,053 கோடி ரூபாய் திட்டச் செலவில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 2020ம் ஆண்டில், நிறுவனம் அதன் விற்று முதலை, 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
புவனேஸ்வரில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், இந்நிறுவனம், மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு உள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்நிறுவனம், மொத்த வருவாயாக, 7,282 கோடி ரூபாயை ஈட்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.வரும், 2020ம் ஆண்டில், நால்கோ நிறுவனம், 17 லட்சம் டன் அலுமினியம் மற்றும் அலுமினாவை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|