பதிவு செய்த நாள்
28 ஏப்2013
00:53
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 48.60 கோடி டாலர் குறைந்து (2,673 கோடி ரூபாய்), 29,476 கோடி டாலராக (16.21 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துஉள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 140 கோடி டாலர் (7,700 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,525 கோடி டாலராக (16.24 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, அதிகரித்து வந்த நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 48.92 கோடி டாலர் (2,690 கோடி ரூபாய்) குறைந்து, 26,241 கோடி டாலராக (14.43 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, எந்தவித மாற்றமுமின்றி, 2,569 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர் மற்றும் சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 20 லட்சம் டாலர் மற்றும் 13 லட்சம் டாலர் அதிகரித்துள்ளது.
சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பும், 61 லட்சம் டாலர் அதிகரித்து, 231 கோடி டாலராகவும், எஸ்.டீ.ஆர். மதிப்பு, 1.15 கோடி டாலர் உயர்ந்து, 434 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ஸ்டெர்லிங், யூரோ, யென், உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|