நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.2,673 கோடி சரிவுநாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.2,673 கோடி சரிவு ... தங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வு தங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வு ...
"யூலிப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2013
00:54

புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், காப்பீட்டு வசதியுடன், செய்யப்பட்ட முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைத்ததால், "யூலிப்' எனப்படும், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்கள், அதிகளவில் விற்பனையாகி வந்தன.கட்டுப்பாடு:இந்நிலையில், மத்திய அரசு, இது போன்ற திட்டங்களுக்கு, கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், "யூலிப்' பாலிசி விற்பனை சரிவடையத் துவங்கியது. மேலும், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பங்கு சார்ந்த ஆயுள் காப்பீட்டு பாலிசி விற்பனை, கடந்த மூன்று ஆண்டுகளாக, சரிவடைந்து வருவதாக, மத்திய இணை அமைச்சர் (நிதி) நமோ நாராயண் மீனா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற நிதியாண்டில், டிசம்பர் வரையிலான காலத்தில், பாலிசி விற்பனை, 0.1 சதவீதம் குறைந்து, 2.69 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், பிரிமியம் வருவாய், 3.96 சதவீதம் அதிகரித்து, 40,686 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பிரிமியம் வருவாய்:இதே போன்று, கடந்த 2010-11ம் நிதியாண்டில், பாலிசி விற்பனை, 9.6 சதவீதம் சரிவடைந்து, 4.81 கோடியாக குறைந்துள்ளது.
அதேசமயம், பிரிமியம் வருவாய், 83,174 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில், சென்ற 2011-12ம் நிதியாண்டில், பாலிசிகளின் விற்பனை, 8.2 சதவீதம் சரிவடைந்து, 4.41 கோடி ரூபாயாகவும், பிரிமிய வருவாய், 22.12 சதவீதம் குறைந்து, 64,772 கோடி ரூபாயாகவும் சரிவு அடைந்துள்ளது.ஆயுள் காப்பீடு :மத்திய அரசு, ஆயுள் காப்பீட்டு துறையில், முதலீட்டை மேம்படுத்தும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து, "இரிடா' அமைப்பும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, ஆயுள் காப்பீடு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, மக்களிடையே, காப்பீடு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நிலையில், இத்துறை சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)