பதிவு செய்த நாள்
28 ஏப்2013
00:54
புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், காப்பீட்டு வசதியுடன், செய்யப்பட்ட முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைத்ததால், "யூலிப்' எனப்படும், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்கள், அதிகளவில் விற்பனையாகி வந்தன.கட்டுப்பாடு:இந்நிலையில், மத்திய அரசு, இது போன்ற திட்டங்களுக்கு, கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், "யூலிப்' பாலிசி விற்பனை சரிவடையத் துவங்கியது. மேலும், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பங்கு சார்ந்த ஆயுள் காப்பீட்டு பாலிசி விற்பனை, கடந்த மூன்று ஆண்டுகளாக, சரிவடைந்து வருவதாக, மத்திய இணை அமைச்சர் (நிதி) நமோ நாராயண் மீனா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற நிதியாண்டில், டிசம்பர் வரையிலான காலத்தில், பாலிசி விற்பனை, 0.1 சதவீதம் குறைந்து, 2.69 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், பிரிமியம் வருவாய், 3.96 சதவீதம் அதிகரித்து, 40,686 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பிரிமியம் வருவாய்:இதே போன்று, கடந்த 2010-11ம் நிதியாண்டில், பாலிசி விற்பனை, 9.6 சதவீதம் சரிவடைந்து, 4.81 கோடியாக குறைந்துள்ளது.
அதேசமயம், பிரிமியம் வருவாய், 83,174 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில், சென்ற 2011-12ம் நிதியாண்டில், பாலிசிகளின் விற்பனை, 8.2 சதவீதம் சரிவடைந்து, 4.41 கோடி ரூபாயாகவும், பிரிமிய வருவாய், 22.12 சதவீதம் குறைந்து, 64,772 கோடி ரூபாயாகவும் சரிவு அடைந்துள்ளது.ஆயுள் காப்பீடு :மத்திய அரசு, ஆயுள் காப்பீட்டு துறையில், முதலீட்டை மேம்படுத்தும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து, "இரிடா' அமைப்பும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, ஆயுள் காப்பீடு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, மக்களிடையே, காப்பீடு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நிலையில், இத்துறை சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|