பதிவு செய்த நாள்
28 ஏப்2013
00:56
சென்னை:தங்கத்தின் விலை, கடந்தவாரத்தில் மட்டும், சவரனுக்கு, 696 ரூபாய் உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை, இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில், திடீரென குறையத் துவங்கியது. தொடர்ந்து, கடந்த வாரத்தில், மீண்டும் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம், 2,593 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 15 ரூபாய் அதிகரித்து, 2,608 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 20,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் சுத்த தங்கம், 10 கிராமிற்கு, 135 ரூபாய் அதிகரித்து, 27,735 ரூபாயிலிருந்து, 27,890 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த திங்களன்று, ஒரு கிராம் தங்கம், 2,521 ரூபாய்க்கும்; ஒரு சவரன், 20,168 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றைய, விலையுடன் ஒப்பிடும் போது, கடந்த வாரத்தில் மட்டும், தங்கத்தின் விலை கிராமுக்கு, 87 ரூபாயும்; சவரனுக்கு, 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.வெள்ளியைப் பொறுத்தவரை, @நற்று ஒரு கிராம் வெள்ளி, 48.60 ரூபாய்க்கும்; ஒரு கிலோ பார் வெள்ளி, 45,445 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|