பதிவு செய்த நாள்
29 ஏப்2013
00:38
கொச்சி:சர்வதேச சந்தையில், இயற்கை ரப்பர் விலை குறைந்து வருகிறது. இதைஅடுத்து, உள்நாட்டிலும், இதன் விலை சரிவடையத் துவங்கியுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில், மோட்டார் வாகனத் துறையில் கடும் மந்த நிலை நிலவுகிறது. இதனால், இயற்கை ரப்பருக்கான தேவையும் குறைந்துள்ளது.
இந்தியாவிலும், மோட்டார் வாகனங்கள் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. ரப்பர் பயன்பாட்டில், இத்துறை, 45 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளது.தேவை குறைவால், உள்நாட்டில், "ஆர்.எஸ்.எஸ்-4' வகை இயற்கை ரப்பர் ஒரு கிலோ, 158-160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது, 140 ரூபாய் வரை சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2011ம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு கிலோ ரப்பரின் விலை, 245 ரூபாய் வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில், கடந்த வாரம், 148 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ இயற்கை ரப்பர், நடப்பு வார இறுதியில், 156 ரூபாயாக இருந்தது. இருப்பினும், பாங்காக் சந்தையில், ஒரு கிலோ ரப்பர், 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, பல டயர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளன. இதனால், உள்நாட்டில், இதன் விலை மேலும் சரிவடையும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்திய தொழில் துறையினர், வரியில்லாமல், ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமாக ரப்பரை இறக்குமதி செய்து கொள்ளமுடியும் என, ரப்பர் வாரியத்தின் தலைவர் ஷீலா தாமஸ் தெரிவித்தார். எனவே, இயற்கை ரப்பர் விலை மேலும் சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|