அதிக வரத்தால் மாதுளை விலை வீழ்ச்சிஅதிக வரத்தால் மாதுளை விலை வீழ்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கரும்பு விளைச்சல் பாதிப்பால்சர்க்கரை உற்பத்தி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
00:42

கடலூர்:கடும் வறட்சி காரணமாக, தமிழகத்தில் கரும்பு விளைச்சல் சரிவடைந்துள்ளது. இதனால், நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்., - செப்.,) தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி, குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நடப்பு ஏப்ரல், 15ம் தேதி நிலவரப்படி, தமிழக சர்க்கரை ஆலைகள், 2.30 கோடி டன் அளவிற்கு, கரும்பு அரவை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரும்பு அரவை, 2.15 கோடி டன் அளவிற்கே இருக்கும் என, தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே காலத்தில் சர்க்கரை உற்பத்தி, மதிப்பிடப்பட்டதை விட, 2.50 லட்சம் டன் குறைந்து, 22 லட்சம் டன்னில் இருந்து, 19.5 லட்சம் டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வறட்சி காரணமாக, கரும்பு விவசாயிகள், கரும்பு பயிரிடும் பரப்பளவை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். வறட்சி தொடர்ந்து நீடித்தால், அவர்கள் மாற்றுப் பயிரை நாடுவர் என, தெரிகிறது. அப்போது, அடுத்த பருவத்தில், கரும்பு உற்பத்தி, 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

மழையின்மை, வறட்சி, மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் குறைவு போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு, கரும்பு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில், சர்க்கரை ஆலைகள் வழக்கமாக, இரு பருவங்களில் கரும்பு அரவை மேற்கொள்வர். கோடைக்கு பின், ஜூலை மத்தியில் துவங்கி, சில சமயம் செப்டம்பர் வரை கரும்பு அரவை நடைபெறும்.இந்த நிலையில், வறட்சி காரணமாக, தமிழகம் முதன் முறையாக, இரண்டாவது பருவத்தில் கரும்பு அரவை மேற் கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)